உழைக்கும் மக்களாலும், அவர்களின் படைப்பாலும் அலங்கரிக்கப்பட்ட நகரம் காஞ்சிபுரம். இந்த மாவட்டத்தில் கோவில்கள், சிற்பங்கள் என உழைக்கும் மக்களின் கற்பனைத் திறனும் உழைப்பும் உயர்ந்து நிற்கிறது. அப்படி ஒரு படைப்பாற்றல் கொண்ட பாட்டாளி வர்க்கம் நிறைந்திருக்கும் மாவட்டம். நாகரிக வளர்ச்சியில் நதிகள் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது. பாலாறு, வேகவதி, செய்யாறு, அடையாறு, கூவம், கொசஸ்தலை என ஒன்றுபட்ட மாவட்டத்தில் ஓடிய நதி நீர், இனக்குழு மக்களை விவசாயத்தில் ஈர்த்து, குடியிருப்புகளைப் பெருக்கியது. தொல்லியியல் துறையினர், 1863ஆம் ஆண்டிலேயே, ராபர்ட் புரூஸ் புட் என்பவர் தலைமையில் அடர் காடுகளில் வாழ்ந்த கற்கால ஆதி மனிதர்களின் வாழ்வாதாரங்கள் குறித்த தடயங்களை பல்லாவரத்தில் கண்டறிந்தனர். பின்னர் மதுராந்தகம் வட்டம் ஒரத்தி, காஞ்சிபுரம் வட்டம் பரந்தூர், கோவிந்தவாடி, இருப்புக்குழி, திருப்பெரும்புதூர், தாம்பரம் வட்டம் நன்மங்கலம் ஆகிய பகுதியி லும் தொன்மை தன்மை கண்டறியப்பட்டு ள்ளது. இனக்குழு ஆட்சிமுறை முடிந்து மன்னராட்சி வரலாற்றில், சங்க கால மற்றும் பிற்கால சோழர்கள், பல்லவர்கள், களப்பிரர், பாணர், சம்புவராயர், சாளுக்கி யர், முத்தரையர், காடவர், ஒய்சாளர், விஜய நகர ஆட்சியர், முகலாயர்கள் என பல்வேறு ஆளுகைக்கு உட்பட்டு மாற்றங்களைக் கொண்ட மாவட்டமாகும். சைவ, வைணவ திருத்தலங்கள் பல பழம்பெருமை கொண்டவையாக உள்ளன. இங்கு சமண திருத்தலமாக திருபருந்து குன்றம் என்ற திருக்கழுக்குன்றம் உள்ளது. பௌத்த விகாரைகள் இருந்ததாக வும் தெரிகிறது. இவை அனைத்தும் மாவட்ட மக்களின் ஆன்மீக செயல்பாட்டைத் தெளிவு படுத்துகிறது. இவையன்றி மன்னர்களின் அழுத்தம் பெறாத நாட்டுப்புற வழிபாடு இன்றளவும் இருப்பதைப் பார்க்கலாம் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஆடி மாத கொண்டாட்டம் ஒரு வகை என்றால், இந்த மாவட்டம் மற்றும் சுற்று வட்டாரங்க ளில் கிராம தெய்வங்களின் வழிபாடு, பெரும் ஆர்ப்பாட்டமாக உள்ளது. இது பண்பாட்டு வேறுபாடாக மட்டுமல்ல, வர்க்க பிளவாக வும் வெளிப்படுகிறது. வர்க்கப் பிளவின் ஒரு பகுதியாக சமூக ஒடுக்குமுறையும், நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்திலிருந்து மேலொங்கி இருந்தது. இதை எதிர்க்கும் போராட்ட வரலாறு இந்த மாவட்டத்தில், பெருமை பொங்கும் வகையில் இருந்துள்ளது, பிரிட்டிஷ் ஆட்சி லண்டனில் நடத்திய வட்ட மேஜை மாநாட்டில் பங்கெடுத்த, இரட்டை மலை சீனிவாசன் பிறந்த கோலியாளம் இங்கு தான் உள்ளது. இதன் தொடர்ச்சியாகலே பஞ்சமி நிலம் வழங்கும் நடவடிக்கையில், அன்றைய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ட்ரெகம்கீர் ஈடுபட்டார், சமூக போராட்ட த்தில் திராவிட இயக்கத்திற்கு முக்கியப் பங்கு உண்டு, அதன் தலைவர்களில் ஒருவ ரான, மறைந்த முதல்வர் அண்ணாதுரை அவர்கள் பிறந்தது இந்த நகரில்தான், அதேபோல் முதல் சுயமரியாதைக்கான மாநாடு நடந்ததும் இந்த மாவட்டமான செங்கல்பட்டில்தான், ஒருபுறம் ஆதிக்க மும் மற்றொருபுறம் அதிலிருந்து விடுதலை பெறுவதற்கான போராட்டமும் தொடர்ந்து நடந்துள்ளதற்கான சான்றுகள் இவை. அதேபோல் காங்கிரஸ் இயக்கத்தின் பிரச்சாரகரான கிருஷ்ணசாமி சர்மா இங்கு தான் பிறந்தார் சிங்கார வேலருடன் மே தின கொண்டாட்டத்தில் பங்கெடுத்தவர், பாரதி யின் இறுதி நிகழ்ச்சியில் பங்கெடுத்த 13 பேரில் ஒருவர் என்ற சிறப்பின் காரண மாக, 1925இல் அவர் இறந்த போது அடக்கம் செய்யப்படாமல் இரண்டு நாட்கள் வைக்கப்பட்டு இருந்தார். இதை அறிந்த 18 வயதான கே.எஸ்.பார்த்தசாரதி சர்மாவின் அடக்கத்தை வேகவதி ஆற்றில் நடத்தினார். மேலும் சர்மாவின் மனைவியை தீ மூட்டச் செய்து சமூக மாற்றத்திற்கான போராளி யாகத் திகழ்ந்த தோழர் கே.எஸ்.பார்த்தசாரதியும் இந்த மண்ணில்தான் பிறந்தார். சமூக சீர்திருத்தங்களுக்கான போராட்டத்தை, மனிதனை மனிதன் சுரண்டுவதற்கு எதிரான போராட்டமாக நடத்தியவர் கே.எஸ்.பார்த்தசாரதி. கைத்தறி நெசவாளர்களுக்கான போராட்டத்தை வழி நடத்தியவர். கூலியும், கூட்டுறவு அமைப்பும் இவர் முயற்சியால் வளர்ந்தது. கைத்தறி சம்மேளனத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். 1975ஆம் ஆண்டில், கிருஷ்ணா எஞ்சினியரிங் என்ற தொழிற்சாலையில் தொழிலாளர்கள் சங்கம் வைத்தபோது, தோழர். வி.பி.சிந்தன் வழிகாட்டுதலுடன் தோழர்கள் கே.ஸ்.பார்த்தசாரதியும், வாசு தேவனும் தொழிற்சங்க போராட்டத்தை நடத்தினர். அதுவே இந்த மாவட்டத்தில் முதல் ஆலை. தொழிலாளர் போராட்டமாகக் கூறப்படுகிறது. மறைமலைநகர் எஸ்டேட் உருவான போது, நிலம் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராகவும், தொழிலாளர் பிரச்சனைக்காகவும் பெரும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் பிரச்சனைகளுக்கான போராட்டம் இங்கு வலுவாக நடந்துள்ளது. அதேபோல் கல்பாக்கம் அணு ஆற்றல் துறை அமை க்கப்பட்ட காலத்திலும், நிலத்திற்கும், தொழிலாளர் உரிமைக்கான போராட்டம் மிக வலுவாக நடைபெற்றுள்ளது. மின் ஊழியர்கள், போக்குவரத்து தொழி லாளர்கள், படாளம் கூட்டுறவு ஆலை தொழி லாளர்கள் எனப் போராட்டங்கள் நிறைந்த மாவட்டமாகக் காஞ்சிபுரம் வளர்ந்தது. கார் தொழிற்சாலைகள், மின்னணு சாதனங்கள் உற்பத்தி, கெமிக்கல் ஆலைகள் என அதிகரித்து. உலகமய, தாராளமய காலத்தில், தொழிலாளர்கள் நவீன சுரண்டல் முறைக்கு ஆளான போது, அதை எதிர்த்து, உரிமைக்காகவும், சுயமரியாதைக்காகவும் உயர்ந்து நிற்பது செங்கொடி இயக்கமே. நெடுஞ்சாலைகளில் செங்கொடி பறக்க அனுமதிக்க முடியாது என்ற அதி காரத்தைத் தகர்த்ததில் சிஐடியு-விற்கு பெரும் பங்குண்டு. இன்றைக்கும் சங்கம் வைக்க முடியாது, வைத்தால் பழி வாங்கு வோம், என ஜனநாயக மற்றும் தொழி லாளர்களின் அடிப்படை உரிமைகளை காலில் போட்டு மிதிப்போம் என்ற அதிகாரத்துடன் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் நடந்து கொள்கின்றன. வேலைநீக்கம், தற்காலிக பணிநீக்கம் போன்றவை அதிகமாக உள்ள ஆலைகளில்தான் தொழிலாளர்கள் தங்களின் உரிமைக்காகச் சங்கம் வைத்துப் போராடி வருகின்றனர். தொழி லாளர் விரோதப் போக்கிற்கு எதிராக வலுவான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
(காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் இந்தியத் தொழிற் சங்க மையம் (சிஐடியு) 14ஆவது மாநில மாநாட்டில் வரவேற்புக் குழு தலைவர் எஸ்.கண்ணன் ஆற்றிய வரவேற்புரையிலிருந்து.)